தூத்துக்குடி.. போலீஸ் தடியடி.. ஷிப்பிங் கம்பெனி டிரைவருக்கு கோமா நிலையில் தீவிர சிகிச்சை!
ஷிப்பிங் கம்பெனி டிரைவருக்கு கோமா நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீஸ் நடத்திய தடியடியில், படுகாயமடைந்த ஷிப்பிங் கம்பெனி டிரைவர் தொடர்ந்து கோமா நிலையில் உள்ளதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் மக்கள் எழுச்சியின்போது நடைபெற்ற போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு 13 பேர் உயிரிழந்தனர். அப்போது போலீசாரால் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் ஜஸ்டின் என்பவரது நிலை தற்போது மோசமாக உள்ளது. இவர் ஓட்டப்பிடாரம் அடுத்த கீழ முடிமண் கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ் என்பவரது மகன் ஆவார். 29 வயதான ஜஸ்டின் பிளஸ் 1 வரை படித்துவிட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஷிப்பிங் கம்பெனி ஒன்றில் ஓட்டுனராக வேலை பார்த்தவர். இவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தநிலையில்தான் போராட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
போலீசாரின் தாக்குதலின்போது, ஜஸ்டின் 3-ம் மைல் பகுதியில் நின்றிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் ஜஸ்டின் மீதும் தடியடி நடத்தியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அரசு மருத்துவமனையிலிருந்த தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் நேற்றுவரை ஜஸ்டினுக்கு சுயநினைவு திரும்பவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். தீவிர சிகிச்சை அளித்தும் கோமா நிலையிலேயே ஜஸ்டின் உள்ளதாக அவர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications