தீவிரமடையும் ஜல்லிக்கட்டுப் போராட்டம்.. மதுரை அருகே 60 கிராமங்களில் கடையடைப்பு
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரும் போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளன. மதுரை அருகில் உள்ள 60 கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
மதுரை: மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் வலுவாக நடைபெற்று வருகின்றன. இன்று மேலூர் அருகில் உள்ள சுமார் 60 கிராமங்களில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பொங்கல் திருநாளுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாத ஜல்லிக்கட்டு விளையாட்டை இந்த ஆண்டாவது நடத்த வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உறுதியாக உள்ளனர்.
ஆனால் அதனை நடத்துவதற்கான எந்த முயற்சிகளையும் மத்திய அரசு செய்யவில்லை. மேலும், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்பு வந்த பிறகுதான் எதுவாக இருந்தாலும் செய்ய முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

கடைகள் அடைப்பு
இந்த நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள வெள்ளலூர் மற்றும் அதனைச் சுற்றி இருக்கின்ற 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் அந்தந்த ஊர் கடைகளை அடைத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்
பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 60 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளலூர் என்றப் பகுதியில் ஒன்று கூடி மேலூரில் உள்ள பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

தன்னெழுச்சி
வெள்ளலூர், கோட்டநத்தம் பட்டி, உறங்கான்பட்டி உள்ளிட்ட 60 கிராமங்களைத் சேர்ந்தத் தலைவர்களே தன்னெழுச்சியாக இந்தப் போராட்டத்தை வழிநடத்திச் செல்கின்றனர்.

மாணவர்கள்
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கான போராட்டம் மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் எந்த அரசியல் மற்றும் சமுதாயத் தலைவர்கள் முன்னெடுக்காத போராட்டமாகவே இது உள்ளது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications