ஐபிஎல் போராட்டம் எதிரொலி.. சென்னை வாலாஜா சாலையில் கடைகள் மூடல்
சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் காரணமாக வாலாஜா சாலையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
Recommended Video

சென்னை: ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் காரணமாக வாலாஜா சாலையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து அண்ணாசாலையில் திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சிகள் பல போராட்டத்தில் ஈடுபட்டன.

அப்போது சிலர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. போராட்டம் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி வணிகர்கள் கடைகளை அவசர அவசரமாக மூடினர்.
வாலாஜா சாலையில் பெரும்பாலும் விளையாட்டு சம்பந்தமான பொருட்கள் விற்பனை கடைகள் அதிகம் இருக்கும். இந்நிலையில் இந்த போராட்டத்தால் தங்களின் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications