மதுரை, தூத்துக்குடியில் இன்று கடையடைப்பு: ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடல்
காவிரி விவகாரத்துக்காக மதுரை, தூத்துக்குடியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.
Recommended Video
மதுரை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பிக்குப் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆளும் அதிமுக சார்பாக இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்திற்கு வணிகர் சங்க பேரமைப்பு, தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், மருந்துக்கடைகள் சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்திருப்பதால், மதுரையில் பெரும்பாலான கடைகள், உணவகங்கள், மருந்துக்கடைகள் மூடப்பட்டிருந்தன.
அதிமுக கட்சியின் சார்பாக நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டம் என்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.
அதுபோல் தூத்துக்குடியிலும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து தூத்துக்குடி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. தூத்துக்குடி ஏரல் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடைகளை அடைத்து எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.