தமிழக சட்டசபை நாளை கூடுகிறது! காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க கோரி தீர்மானம்?
சென்னை: தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை கூடுகிறது. இக்கூட்டத் தொடரில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடும் எனத் தெரிகிறது.
தமிழக சட்டசபை நாளை கூடியதும் மறைந்த ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. பெருமாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன்பிறகு அன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டு நாளை மறுநாள் காலை மீண்டும் சட்டசபை கூடும் என்று அறிவிக்கப்படும்.

சட்டசபையின் அலுவல் ஆய்வு நாளை கூடி சட்ட சபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்கிறார்கள். இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருவதால் அது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடும் என்று தெரிகிறது.
கடந்த கூட்டத் தொடரின் போது 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டிருந்தனர். அவர்களது சஸ்பென்ட் காலம் முடிந்ததால் நாளைய சட்டசபை கூட்டத் தொடரில் அவர்கள் பங்கேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications