சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதிலடி... 7 திமுக எம்.எல்.ஏக்கள் அதிரடி சஸ்பென்ட்?
சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதிலடியாக 7 திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 7 தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட் செய்யப்படலாம் என தெரிகிறது. திமுகவின் 7 எம்.எல்.ஏக்களுக்கு திடீரென உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டசபையில் கடந்த மாதம் 18-ந் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த களேபரத்தின் போது சபாநாயகர் இருக்கையில் திமுக எம்.எல்.ஏக்கள் கு.க. செல்வம், ரங்கநாதன் உள்ளிட்டோர் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். அத்துடன் சட்டசபைக்குள்ளேயே அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தினர்.

ஸ்டாலின் மீது தாக்குதல்
இதையடுத்து சட்டசபை மார்ஷல்கள் சீருடை அணிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது ஸ்டாலின் தாக்கப்பட்டதாகவும் அவரது சட்டசை கிழிக்கப்பட்டதாகவும் பஞ்சாயத்து எழுந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
இதனைத் தொடர்ந்து சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது வரும் 23-ந் தேதி விவாதம் நடைபெற உள்ளது.

திடீர் உரிமை மீறல் நோட்டீஸ்
திமுகவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக திடீரென அக்கட்சியின் 7 எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபையின் மாண்பை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சபாநாயகர் இருக்கையில் வேண்டுமென்றே அமர்ந்த ரங்கநாதன் எம்.எல்.ஏ.வுக்கு நோட்டீஸ் போகவில்லை.

சஸ்பென்ட்?
இந்த உரிமை மீறல் நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் நடைபெறும் நாளில் திமுகவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் இந்த 7 எம்.எல்.ஏக்களும் சஸ்பென்ட் செய்யப்படக் கூடும் என்றே கூறப்படுகிறது.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications