ஜெ., பதவியேற்பு விழாவிற்கு வந்த எஸ்ஐ.யிடம் இருந்து ரூ.40,000 திருட்டு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழா பாதுகாப்பிற்காக வந்த சப்.இன்ஸ்பெக்டரிடம் இருந்து ஏடிஎம் கார்டை திருடி ரூ.40,000 கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதவரம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் தனபால். இவர்,முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் பாதுகாப்பிற்காக வந்திருந்தார். சென்னை பல்கலைக் கழகம் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார்.

மெரினா உட்புற சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்த மர்ம நபர்கள், உள்ளே இருந்த ஏடிஏம் கார்டை எடுத்துள்ளனர். ஏடிஎம் அட்டையின் பின்புறம் ரகசிய எண் குறிப்பிடப்பட்டிருந்ததால், அதை வைத்து தனபால் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.40,000 பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
பணம் எடுக்கப்பட்ட உடன் தனபாலுக்கு எஸ்.எம்.எஸ் தகவல் வந்துள்ளது. உடனே அதிர்ச்சி அடைந்த தனபால், அண்ணா சதுக்கம் போலீசில் புகார் செய்தார். அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
ஏடிஎம் கார்டின் பின்புறம் ரகசிய பின் நம்பரை குறித்து வைக்கக் கூடாது என்று பலமுறை அறிவுறுத்தியும் அதை கவனத்தில் கொள்ளாமல் சப். இன்ஸ்பெக்டரே பணத்தை பறிகொடுக்கும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா பதவியேற்பு விழாவிற்கு பாதுகாப்புக்கு வந்த சப். இன்ஸ்பெக்டரே பணத்தை பறிகொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications