போலீஸ் பூத்தில் இளம்பெண்ணுடன் எஸ்.ஐ. உல்லாசம்: கையும் களவுமாக பிடித்த மக்கள்
சென்னை: போலீஸ் பூத்தில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்களிடம் கையும் களவுமாக சிக்கினார்.
மத்திய சென்னையில் உள்ள ஓட்டேரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் செவ்வாய்க்கிழமை இரவு பனந்தோப்பு காலனியில் இருக்கும் போலீஸ் பூத்துக்கு பணிக்கு சென்றார். அந்த பூத்துக்கு வந்த இளம் பெண் ஒருவருடன் சப்-இன்ஸ்பெக்டர் சிரித்து சிரித்து பேசினார். இதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் காணவில்லை.
இதையடுத்து பொது மக்கள் பூத்தில் பார்த்தபோது சப்-இன்ஸ்பெக்டரும், அந்த பெண்ணும் மறைவான இடத்தில் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே மக்கள் அவர்களை கையும் களவுமாக சிறைபிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த துணை கமிஷனர் சுதாகரிடம் அவர்களை பொதுமக்கள் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த சப்-இன்ஸ்பெக்டர் அயனாவரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.