சென்னை விமான நிலையத்தில் சிக்னல் கோளாறு... விமானங்கள் திருப்பிவிடப்பட்டதால் பயணிகள் அவதி
Subscribe to Oneindia Tamil
சென்னை : விமான நிலையத்தில் உள்ள உள்நாடு மற்றும் வெளிநாட்டு முனையத்திற்கு வந்த விமானங்கள் சிக்னல் கோளாறு காரணமாக வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
இதனால் சென்னை வந்து இறங்க வேண்டிய பயணிகள் அவதியடைந்தனர்.

இரவு சுமார் 8.30 மணியளவில் விமான நிலைய கட்டுப்பாட்டு பிரிவில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் சிக்னல் கோளாறு நீடித்ததால் விமான போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னைக்கு வந்த டெல்லி, துபாய் விமானங்கள் பெருங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.












Click it and Unblock the Notifications