ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடக்கம்
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையால், பொதுமக்களுக்கு உடல்நலைக்குறைவும், இயற்கை வளங்களும் பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்த ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
மக்களின் இந்த போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், மாணவர் இயக்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து இந்த போரட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது.
இந்நிலையில், டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், தூத்துக்குடி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடம் ஆலையை மூடுவதற்காக கையெழுத்து வாங்கப்பட்டது.