நடிகர் சங்கத் தேர்தல்... சரத்குமார் அணியில் துணைத்தலைவராக சிம்பு போட்டி
சென்னை : நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியின் சார்பில் சிம்பு துணைத் தலைவராகப் போட்டியிடுகிறார்.
சென்னையில் சரத்குமார் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிம்பு துணைத் தலைவராக போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. தற்போது தலைவராக இருக்கும் சரத்குமாரை எதிர்த்து விஷால் அணியினர் போட்டியிடுகின்றனர்.
இதற்காக இரண்டு அணிகளும் நடிகர் சங்க உறுப்பினர்களை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் குறித்து சரத்குமார் தலைமையில் இன்று தி.நகரில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, ராம்கி, சிம்பு, ஷாம், விஜயகுமார், பப்லு, நடிகைகள் ராதிகா, மும்தாஜ், நீலிமா ராணி, பாத்திமா பாபு, நிரோஷா உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சிம்பு துணைத் தலைவராக போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.
பின்னர் பேசிய நடிகர் சிம்பு சரத்குமார் தலைமையிலான அணிதான் நடிகர்களுக்காகப் பாடுபடும் அணி என்றும், நடிகர் சங்கத் தேர்தலில் உண்மைதான் வெற்றிபெறும் எனவும் கூறினார்.
கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக நடிகர் சங்கத்தின் தலைவராக சரத்குமார் இருந்து வருகிறார்.
நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூர் செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் அக்டோபர் 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications