Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛லீ குவான் யூ’.. கும்பகோணத்தில் கம்பீரமாக உருவான சிங்கப்பூர் மாஜி பிரதமரின் சிலை.. சுவாரசிய பின்னணி

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: சிங்கப்பூரை வடிவமைத்த சிற்பி என போற்றப்படும் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் சிலை கும்பகோணத்தில் செதுக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 150 கிலோ எடை, 6 அடி உயரத்தில் கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வெண்கல சிலை எதற்காக உருவாக்கப்பட்டுள்ளது? சிலை சொன்னது யார்? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ. இவர்தான் அந்த நாட்டின் நீண்ட காலம் பிரதமராக பொறுப்பு வகித்தவர். கடந்த 1959 முதல் 1990 வரை சிங்கப்பூரின் பிரதமராக இருந்தார். இவரது திட்டங்கள், செயல்பாடு தான் சிங்கப்பூரை உலக தரத்துக்கு மாற்றியது. இதனால் சிங்கப்பூரை வடிவமைத்த சிற்பி என்றே லீ குவான் யூ-வை கூறலாம்.

singapore lee kuan yew statue kumbakonam thanjavur


அதோடு சிங்கப்பூருக்கும், தமிழர்களுக்கும் நெருக்கமான உறவு உள்ளது. ஏனென்றால் சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் இருந்தாலும் தமிழர்களும் கணிசமாக உள்ளனர். அதோடு அந்த நாட்டில் தமிழ் என்பது அரசு அங்கீகரித்த மொழிகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக லீ குவான் யூ தனது பதவிக்காலத்தில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

சிங்கப்பூரில் தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதில் பெரிதும் உறுதுணையாக செயல்பட்டவர். இதனால் தான் லீ குவான் யூவுக்கு தமிழ்நாட்டில் அதிக முக்கியத்துவம் உள்ளது. இவர் கடந்த 2015 மார்ச் 23ம் தேதி காலமானார். ஆனாலும் கூட அவர் தமிழர்கள் அவரது பிறந்தநாள், நினைவு நாள் கடைப்பிடிப்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருவலஞ்சுழியில் 150 கிலோ எடையில், 6 அடி உயரத்தில் லீ குவான் யூ-வின் வெண்கல சிறை கம்பீரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த கருணாநிதி சிங்கப்பூரில் தொழிலதிபராக உள்ளார். இவர் லீ குவான் யூ-வுக்கு சிலை செய்து சிங்கப்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் நிறுவ முடிவு செய்தார்.

இதையடுத்து அவர் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி பகுதியில் சிலை செய்ய ஆர்டர் கொடுத்தார். இந்த பகுதியில் கோவில்களுக்கு தேவையான ஐம்பொன் சிலைகள் தயார் செய்யும் சிற்பிகள் அதிகம் உள்ளனர். இந்நிலையில் தான் தொழிலதிபர் கருணாநிதி, லீ குவான் யூ-வின் சிலையை உருவாக்கும் பணியை சாய் கணேஷ் சிற்பக் கூட ஸ்தபதிகளான வேதா இராமலிங்கம் மற்றும் அவரது மகன் வேதாச்சலம் ஆகியோரிடம் வழங்கினார்.

இதையடுத்து லீ குவான் யூ-வின் சிலை செய்யும் பணி தொடங்கியது.மிகவும் நுட்பமாகவும், லீ குவான் யூ-வின் உருவத்தை தத்ரூபமாகவும் பிரதிபலிக்கும் வகையில் இந்த சிலை செதுக்கப்பட்டது. தற்போது சிலை செதுக்கும் பணி முழுவதுமாக முடிவடைந்துள்ளது. 6 மாதம் நடந்த பணி தற்போது நிறைவு பெற்ற நிலையில் சென்னையில் உள்ள தொழிலதிபர் கருணாநிதியின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இந்த சிலை சிங்கப்பூருக்கு கொண்டு சென்று நிறுவப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+