Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடி துப்பாக்கிசூடு.. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு சீதாராம் யெச்சூரி நேரில் ஆறுதல்

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு சீதாராம் யெச்சூரி ஆறுதல் கூறினார்.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

Sitaram Yechuris comfort for the families of the victims of gunfire in Thoothukudi

அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று தூத்துக்குடி வந்தார். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர்களின் வீடுகளுக்கு சென்ற அவர், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அவர்களுக்கு ஆறுதல் வழங்கினார்.

இதனை தொடர்ந்து அரசு மருத்துவனையில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது, அவர்கள் தங்கள் மீது போலீசார் சரமாரி சுட்டதாக புகார் தெரிவித்தனர். அதற்கு யெச்சூரி, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக சீதாராம் யெச்சூரி உறுதி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+