சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: அறைகள் தரைமட்டம்
விருதுநகர்: சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பட்டாசு தயாரிக்கும் அறை இடிந்து தரைமட்டமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களுக்கு எந்த வித காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
சிவகாசி காமாக் ரோட்டை சேர்ந்தவர் உமாகாந்த், 45. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகே ஜமீன்சல்வார் பட்டியில் உள்ளது. இங்கு 64 அறைகள் உள்ளன. வழக்கம் போல் நேற்று இந்த பட்டாசு ஆலையில் சுமார் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மதிய உணவு இடைவேளையின் போது, தொழிலாளர்கள் பட்டாசுகள் தயாரிக்கும் அறையை விட்டு சில மீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு அறைக்கு சென்று உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த ஆலையின் அறை ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரை மட்டமானது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலை ஆய்வு தனி தாசில்தார் முத்துலட்சுமி, சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளையன், இன்ஸ்பெக்டர் சீனிவாசகன், சப்இன்ஸ்பெக்டர் ராமராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெடி விபத்து நடந்த அறையில் சரவெடிகளுக்கு மருந்து செலுத்தும் பணி நடந்து வந்துள்ளது. உணவு இடைவேளை என்பதால் பணியை பாதியில் நிறுத்திவிட்டு சாப்பிட சென்றதால் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. உணவு இடைவேளையின் போது வெடிவிபத்து நடந்ததால் உயிரிழப்பு இல்லாமல் போனது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் உள்ளன. அடிக்கடி இங்கு வெடிவிபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முதலிப்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 50 பேர் பலியானார்கள், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளினால் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள் நிகழ்ந்தாலும் உயிர்சேதம் தவிர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications