ஃபேஸ்புக்கிலிருந்து விலகினார் நடிகர் சிவகுமார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது பதிவுகளை வைத்து சிலர் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்த ஆரம்பித்திருப்பதால் பேஸ்புக்கிலிருந்து விலகிக் கொள்வதாக நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் சிவகுமாரின் பக்கத்தை கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் விரும்பி லைக் போட்டுள்ளனர்.

Sivakumar quits from Facebook

அவரும் அவ்வப்போது நல்ல தகவல்களை கட்டுரைகளாகத் தந்து வருகிறார். ஆனால் இப்போது திடீரென, பேஸ்புக்கிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியிருப்பது:

என்றுமே என்னை மனிதப் புனிதன்
என்றோ - வழிகாட்டும் தலைவன்
என்றோ - வாரி வழங்கும் வள்ளல்
என்றோ - பேரறிவாளன் என்றோ -
நடிப்புக் கலை - ஓவியக் கலையில்
கரை கண்டவன் என்றோ - பெரிய சாதனையாளன் என்றோ நினைத்துக் கொண்டு நான் முகநூலில் பதிவிடவில்லை.

70 வயது தாண்டி, முடிந்தவரை நேர்மையாக, இந்த மண்ணில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை, தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளவே எழுதி வந்தேன்.
இது சிலருக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் வன்மத்தை - சாதி வெறியை - வளர்த்துக் cகொள்ள காரணமாக இருக்கிறது என்று அறிந்து வருந்துகிறேன் .

தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கவும், குடும்பத்தினரைக் குறை கூறவும் , நானே களம் அமைத்துக் கொடுத்ததாக உணர்கிறேன்.

என் உலகம் சிறியது, அதில் என் வாழ்க்கை மிகவும் எளிமையானது.

இது உங்கள் உலகம், உங்கள் சுதந்திரம். நீங்கள் நினைத்தபடி வாழுங்கள்.

எல்லோரும் இன்புற்றிருக்கவே இத்துடன் என் முகநூல் பதிவுகளை நிறைவு செய்கிறேன்!

- சிவகுமார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+