கோவில்பட்டியில்.. கதர் ஆடை ஆணிய வலியுறுத்தி ஸ்கேட்டிங் போட்டி!
கோவில்பட்டி: கோவில்பட்டி சுவாமி விவேகானந்த ஸ்கேட்டிங் மற்றும் யோக கழகம் சார்பாக மக்கள் கதர் ஆடையை பயன்படுத்த வலியுறுத்தி மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்தப்பட்டன.
தமிழகத்தில் பாரம்பரியத்தையும்,இந்திய கலச்சாரத்தை வெளிப்படுத்துவதில் முக்கிய இடம் பெற்றது கதர் ஆடை. நாம் ஆராம்பகாலங்களில் கதர் ஆடையை பயன்படுத்தி வந்தோம் காலப்போக்கில் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் அவர்கள் பயன்படுத்தி வந்த பாலிஸ்டர் துணிகளை பயன்படுத்த தொடங்கினோம். இதனால் தேச தந்தை காந்தியடிகள் வெளிநாட்டு துணிகளை தீயிட்டு கொளுத்தி கதர் ஆடைகளை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி கதர் ஆடைகளை தோளில் வைத்து விற்பனை செய்தார்.
மகாத்மா காந்தி போற்றிய ஆடைகளை நாம் ஆணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சுவாமி விவேகானந்தா ஸ்கேட்டிங் மற்றும் யோக கழகம் சார்பாக கதர் ஆடையை பயன்படுத்த வலியுறுத்தி மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் கே.ஆர்ஏ பள்ளியில நடைபெற்றது.
இந்த நிகழச்சியில் கோவில்பட்டி சார்-ஆட்சியாளர் விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற ஆணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் கோவில்பட்டி கே.ஆர்.ஏ பள்ளி ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.2வது பரிசுசெயிண்டதாமஸ் பள்ளியும் சிறப்பு பரிசு எடுஸ்டார் பள்ளியும் பெற்றன.
இதில் பள்ளி முதல்வர் ஜெஜயக்குமார், ம த்தியதிரைப்படகுழு உறுப்பினர் வக்கீல் முருகானந்தம், தமிழநாடு வணிகர் சங்க வடக்கு மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழக தலைவர் சுரேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.