ஸ்மால் பஸ்களில் இருப்பது இரட்டை இலை இல்லை, அது ஒரு 'நேச்சுரல் சீனரி'...செ.கு. தமிழரசன்

முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்த ஸ்மால் பஸ்கள் சென்னை நகரில் ஓடுகின்றன. இந்த பஸ்களில் இரட்டை இலை வரையப்பட்டுள்ளது. இது குறித்து கேட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் கடந்த 25ம் தேதி சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் இன்று சட்டசபையில் கேள்வி நேரத்திற்கு பிறகு இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் எம்.எல்.ஏ. ஸ்மால் பஸ்கள் பற்றி பேசினார். அப்போது அவர், ஸ்மால் பஸ்களில் இருப்பது இரட்டை இலை இல்லை அது இயற்கை காட்சி என்று தெரிவித்தார்.
இதை கேட்ட எ.வ. வேலு உள்ளிட்ட திமுகவினர் அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அதிமுகவில் இருந்து சென்ற எ.வ.வேலுவுக்கு இது பற்றி பேச உரிமை இல்லை என்று முனுசாமி தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கோஷமிட்டனர். உடனே அவர்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயரர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து திமுகவினர் வெளியேற்றப்பட்டார்கள்.
முன்னதாக எம்.ஜி.ஆர். நினைவிடத்தை சீரமைத்து அங்கு இரட்டை இலை சின்னம் வைக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு அது குதிரையின் இறக்கை என்று கூறப்பட்டது. மேலும் அம்மா குடிநீர் பாட்டில்களிலும் இரட்டை இலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications