செங்கோட்டையில் ஆனந்த நடனம் ஆடிய பாம்புகள்...
செங்கோட்டை: செங்கோட்டையில் நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் இணைந்து நடனமாடிய காட்சியை ஏராளமானோர் மெய்மறந்து வேடிக்கை பார்த்தனர்.
செங்கோட்டை சித்தாறு காரையில் அமைந்துள்ளது ஆரிய குற்றாலவிநாயகர் ஆலயம்.இந்த ஆலயத்தின் அருகே.எதிர்புறம் ஆஞ்சநேயர்ஆலயம் அமைந்துள்ளது.

இதற்கு அருகே நேற்று மதியம் சுமார் இரண்டரை மணியளவில் நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் இணைந்து ஆனந்தமாய் சுமார் 4 அடிஉயரம் எழும்பி இணைந்த நிலையில் ஆடிக் கொண்டிருந்தன.
அந்த வழியே சென்ற சிலர் இதனைப் பார்த்து அங்கேயே வேடிக்கை பார்த்தவண்ணம் நின்றனர். இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து எராளமானவர்கள் திரண்டுவந்து இந்த அரிய காட்சியை கண்டு மெய் மறந்து நின்றனர்.

அமாவாசை தினத்தில் இதுபோன்று பாம்புகள் கூடி ஆனந்த தாண்டவம் ஆடுவது வழக்கம். இந்த சமயத்தில் யாரும் இந்த விளையாட்டை கலைத்துவிடக்க்கூடாது. அப்படி செய்தால் அது நாகதோஷம் ஆகிவிடும். மேலும் இருபாம்புகளும் கடுமையானகோபமும்ஏற்பட்டு சாபம் இடும் என்று அங்கு கூடி நின்ற பெரியவர்கள் பேசிக்கொண்டனர்.
சிறிது நேரத்தில் நடனமாடிய பாம்புகள் இரண்டும் களைத்துப் போய் புதருக்குள் ஓடி மறைந்து கொண்டன. பாம்பு நடனம் பார்த்தவர்களும் படம் முடிந்த திருப்தியில் வேலையை பார்க்க கிளம்பினர்.












Click it and Unblock the Notifications