ரஜினி மக்கள் மன்றத்திற்கு சமூக வலைதள நிர்வாகிகள் நியமனம்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு!
ரஜினி மக்கள் மன்றத்திற்கு சமூக வலைதள நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை: ரஜினி மக்கள் மன்றத்திற்கு சமூக வலைதள நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை ரஜினி கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார். 2021ல் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பின் கட்சி சின்னம், பெயர் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
முறையான கட்சி அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்களை தினசரி அரசியல் குறித்து பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.அவர் இணையதளம் மட்டும் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் தற்போது ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட மாவட்ட நிர்வாகிகள் எல்லோரும் நியமிக்கப்பட்டுவிட்டனர். தற்போது சமூக வலைதள நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
🙏🏻🤘🏻We apologise for some typo / name errors in our previous posts. It’s been corrected and here is the official final #RMMFacebook #RMMTwitter lists. Please do follow. Verification process is ongoing 🙏🏻 #RajiniMakkalMandram pic.twitter.com/o7RUctEuSP
— soundarya rajnikanth (@soundaryaarajni) June 28, 2018
இதுகுறித்த முறையான அறிவிப்பை ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பேஸ்புக், டிவிட்டர் நிர்வாகிகள் விவரத்தை வெளியிட்டுள்ளார்.