சினிமாவை போன்று அரசியலிலும் யாரோ ரஜினியை இயக்குகிறார்கள்: திருமாவளவன் பேட்டி
சினிமாவை போன்று அரசியலிலும் யாரோ ரஜினியை இயக்குவதா திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கோவை: சினிமாவை போன்று அரசியலிலும் யாரோ ரஜினியை இயக்குகிறார்கள் என்று தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என கூறும் ரஜினி, நிஜ வாழ்க்கையில் வேறு நிலைபாட்டை கொண்டவர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களை சந்துத்து ஆறுதல் கூறியதுடன், நிவாரண உதவியும் செய்துள்ளது மகிழ்ச்சி. ஆனால், காவல்துறை, ஆலை பற்றி முதல்வர் கூறியதையே ரஜினி எதிரொலித்துள்ளார்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ்., மதவாத சக்திகளின், தனியார் நிறுவனங்களின் குரலாகவே ரஜினி குரல் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின், மக்களின் குரலாக இல்லை. தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகள் என ரஜினி கூறுவது வேதனை அளிக்கிறது. அவர் தானாக பேசுகிறார் என நம்ப முடியாத அளவிற்கு உள்ளது.
சினிமாவை போன்று அரசியலிலும் யாரோ ரஜினியை இயக்குவதுபோல் தோன்றுகிறது. யார் அந்த சமூக விரோதிகள் என தமிழக அரசும், ரஜினியும் கூற வேண்டும். திமுக மாதிரி சட்டமன்றம் நடத்தியது ஒரு வகையான போராட்ட வடிவம். முதல்வர் பதவி விலகி விட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என்பதில்லை. மாறாக அனைத்திற்கும் முதல்வர் பொறுப்பு என்று முதல்வருக்கும், மக்களுக்கும் உணர்த்தவே அந்த கோரிக்கையை முன் வைக்கப்படுகிறது.
வேல்முருகனை அச்சுறுத்தவும், ஒடுக்கவும் அரசு முயல்கிறது. அவரை உடனே விடுவிக்க வேண்டும். காவிரி, ஹைட்ரோகார்பன் என மக்கள் பிரச்னைக்கு தமிழகம் போராடி வரும் நிலையில், அதற்கு குரல் கொடுக்காமல் சிவகங்கையில் மக்களை தாக்குவது கண்டனத்திற்குரியது. பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மாநில அரசை குறை கூறுவது சரியில்லை. எண்ணெய் நிறுவனங்கள் தாமாக விலையை நிர்ணயித்துக்கொள்ளும் அனுமதியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications