Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடும்பத்தகராறு.... மாமனார், மாமியார் எரித்துக் கொலை - சரண்டைந்தார் மருமகன்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாமனார், மாமியாரை எரித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மருமகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சண்முகம்மாள். இ்ந்த தம்பதியருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது வீட்டிலேயே 2 ஆவது மகள் அமுதா மற்றும் அவரது கணவர் பிரசாத் ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். பிரசாத் தூத்துக்குடியில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அமுதா உடல்நலக்குறைவு காரணமாக அவரது அக்காள் வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.

நேற்றிரவு வேலை முடிந்து குடிபோதையில் வீட்டிற்கு வந்த பிரசாத் மாமியார், மாமனாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் அவர்கள் பிரசாத்தை கண்டித்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் வீட்டிற்குள் தூங்கிவிட்டனர். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டு வாசலில் படுத்திருந்த பிரசாத் குடிசை வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளார். இதில் உடல் கருகி சக்திவேலும் அவரது மனைவியும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பின்னர் பிரசாத் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். சம்பவ இடத்தில் எஸ்.பி அஸ்வின் கோட்னீஸ், ஏ.எஸ்.பி அருண் சக்திகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். நள்ளிரவில் நிகழ்ந்த இந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+