குடும்பத்தகராறு.... மாமனார், மாமியார் எரித்துக் கொலை - சரண்டைந்தார் மருமகன்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாமனார், மாமியாரை எரித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மருமகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சண்முகம்மாள். இ்ந்த தம்பதியருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது வீட்டிலேயே 2 ஆவது மகள் அமுதா மற்றும் அவரது கணவர் பிரசாத் ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். பிரசாத் தூத்துக்குடியில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அமுதா உடல்நலக்குறைவு காரணமாக அவரது அக்காள் வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.
நேற்றிரவு வேலை முடிந்து குடிபோதையில் வீட்டிற்கு வந்த பிரசாத் மாமியார், மாமனாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் அவர்கள் பிரசாத்தை கண்டித்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் வீட்டிற்குள் தூங்கிவிட்டனர். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டு வாசலில் படுத்திருந்த பிரசாத் குடிசை வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளார். இதில் உடல் கருகி சக்திவேலும் அவரது மனைவியும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர் பிரசாத் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். சம்பவ இடத்தில் எஸ்.பி அஸ்வின் கோட்னீஸ், ஏ.எஸ்.பி அருண் சக்திகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். நள்ளிரவில் நிகழ்ந்த இந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications