For Daily Alerts
Just In
சென்னை பங்களாவில் விபச்சாரம்.. சோனாலட்சுமி குரூப்பைச் சேர்ந்த 3 புரோக்கர்கள் கைது!
விபச்சாரத் தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் கணபதி மற்றும் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீஸ் குழு, எழும்பூர் பகுதியில் திடீர் சோதனையில் குதித்தது.
அவர்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மான்டியத் சாலையில் உள்ள ஒரு பங்களாவில் போலீஸ் படை புகுந்து விசாரணை மற்றும் சோதனை நடத்தியது. அப்போது அங்கு சில பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக மும்பையைச் சேர்ந்த கிருஷ்ணா சிங், பகதூர், தீபக் பத்ரா ஆகிய 3 பேரை கைது செய்தனர். விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 2 பெண்களும் மீட்கப்பட்டனர். இவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்..
புரோக்கர்கள் 3 பேரும் சோனா லட்சுமி கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
Comments
English summary
Police have arrested pimp Sonalakshmi's gang in Chennai.
Story first published: Thursday, May 15, 2014, 16:49 [IST]