ஸ்டாலின் ஒரு துளசி செடி, இணைப்புப் பாலம்... ஜெகத்ரட்சகன் புகழாரம்!
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி புதிய பாடல் கேசட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 63வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில், ஸ்டாலினைப் பாராட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர் பாபுவும், இளைஞர் அணி அசன் முகமது அலி ஜின்னாவும் புதிய பாடல் சி.டி. ஒன்றைத் தயார் செய்துள்ளனர்.
கவிஞர்கள் பா.விஜய், விவேகா, பழனி பாரதி, யுகபாரதி, நெல்லை ஜெயந்தா உள்ளிட்டோர் எழுதியுள்ள இந்த பாடலுக்கு தாஜ்னூர் இசையமைத்துள்ளார். இந்த பாடல் சி.டி. வெளியீட்டு விழா மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது.

இந்த சிடி வெளியீட்டு நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி கோகுல கிருஷ்ணன், சுப.வீரபாண்டியன், தமிழச்சி தங்க பாண்டியன், பா.விஜய், விவேகா, பொற்கோ, முன்னாள் அமைச்சர் தென்னவன் செங்கை சிவம், காசிமுத்து மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், ஸ்டாலின் குறித்த பாடல் சி.டி.யை ஜெகத்ரட்சகன் வெளியிட நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து விழாவில் ஜெகத்ரட்சகன் பேசியதாவது :-
பி.கே.சேகர்பாபு, நெஞ்சில் முழுமையாக ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார். மாநாடு போல் பெரும் கூட்டம் சேர்த்து இந்த விழாவை நடத்துகிறார். மு.க.ஸ்டாலின் தமிழ் இளைஞர்களை தட்டி எழுப்பக்கூடியவர். அவர் ஒரு துளசி செடி. 8 கோடி தமிழர்களை இணைக்கும் பாலமாக செயல்படுகிறார்'' என்றார்.
சுப.வீரபாண்டியன் பேசும்போது, ‘‘மிசா கொடுமைகளை சந்தித்தவர் ஸ்டாலின். சிங்கார சென்னையை உருவாக்கினார். மேம்பாலங்கள் கட்டி போக்குவரத்து நெரிசலை தீர்த்தார்'' என்றார்.
விழாவில் ஏகப்பன், மணி வேலன், ஆசாத், விஜயகுமார், புனிதவதி, தேவஜவகர், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பி.கே.சேகர் பாபு செய்திருந்தார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications