மழையால் ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்பப் பெறும் கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை: மழை வெள்ளத்தால் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை திரும்பப் பெறும் கால அவகாசத்தை 10 நாட்களாக நீட்டித்துள்ளது தெற்கு ரயில்வே.
மழை வெள்ளம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளத்தால் இதுவரை 561 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மழையால் மின்சார ரயில் சேவையும் பாதிப்பு அடைந்தது.

ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் ரத்தான ரயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தை திருப்பி அளிப்பதாகவும் அதை 3 நாட்களில் பெற்றுக் கொள்ளுமாறும் தெற்கு ரயில்வே அறிவித்தது.
ஆன்லைனில் டிக்கெட்டை முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும், நேரில் பதிவு செய்தவர்கள் ரயில் நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பயணிகள் பணத்தை திரும்பப் பெறும் கால அவகாசத்தை 3ல் இருந்து 10 நாட்களாக அதிகரித்து அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.
இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் வஷிஷ்டா ஜோஹ்ரி கூறுகையில்
ரயில் ரத்து செய்யப்பட்ட நாளில் இருந்து 10 நாட்கள் வரை டிக்கெட் கட்டணத்தை பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications