கன மழையால் நனைந்து குளிர்ந்த தென் மாவட்டங்கள்... வைகையில் வெள்ளம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: கன மழை காரணமாக தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் இடியுடன் கூடி கன மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் மக்களை மகிழ்விக்கும் வகையில் கன மழை பெய்து வருகிறது. சென்னை முதல் குமரி வரை மழை விடாமல் வெளுத்துக் கட்டி வருகிறது.

Southern TN receives good rain

தென் மாவட்டங்களிலும் பல பகுதி்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரையில் கடந்த பல நாட்களாக பெரிய மழை இல்லாத நிலையில் நேற்று நல்ல மழை பெய்தது. இதனால் வைகை அணையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இரு கரைகளையும் தொட்டபடி ஆற்றில் நீர் ஓடியதால் மக்கள் மகிழ்ச்சியுடன் வேடிக்கை பார்க்க படையெடுத்தனர். தொடர்ந்து மழை பெய்தால் குடிநீர்ப் பிரச்சினை வராது என்றும் மக்கள் தெரிவித்தனர்.

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் நகரிலும், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. கன மழை காரணமாக திண்டுக்கல் நகரின் பல தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

மாவட்டத்தில், கொடைக்கானலில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கையிலும் நல்ல மழை பெய்துள்ளது. நகரில் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. காரைக்குடியில் பெய்த மழையால் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

தேனி

தேனி மாவட்டத்திலும் பல பகுதி்களில் கன மழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டம் 136 அடியைத் தொட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+