போப்பாண்டவரை சந்தித்தோம்.. நெகிழ்ச்சியில் செளம்யா அன்புமணி
சென்னை: பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும், அவரது மனைவி செளம்யா அன்புமணியும் போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸைச் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்த நெகிழ்ச்சிகரமான புகைப்படங்களை தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் அன்புமணி. அதில் அன்புமணியின் மனைவி செளம்யா, போப்பாண்டவரின் கையை எடுத்து தனது நெற்றியில் வைத்து அவரது ஆசிர்வாதத்தைப் பெறுகிறார். மேலும் போப்பாண்டவரை சந்தித்ததால் ஏற்பட்ட நெகிழ்ச்சியும், உணர்ச்சிப் பெருக்கும் செளம்யா முகத்தில் ததும்பி நிற்கிறது.

இந்த சந்திப்பு குறித்து அன்புணி போட்டுள்ள பதிவில், போப்பாண்டவரை சந்தித்தோம். அவரது எளிமையும், அன்பும் எங்களை நெகிழ வைத்து விட்டது என்று கூறியுள்ளார் அன்புமணி.

போப்பாண்டவர், அன்புமணியிடம் சில வார்த்தைகள் பேசியுள்ளார். அன்புமணியும் தன்னைப் பற்றியும், தனது பசுமைத் தாயகம் அமைப்பு குறித்தும் விளக்கியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications