செய்தியாளர் மாடத்தில் ஒலி பெருக்கி திடீர் 'கட்'.. அவையில் நடப்பது புரியாமல் நிருபர்கள் அவதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபை செய்தியாளர் மாடத்தில் ஒலிபெருக்கி சத்தம் 'கட்' ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு பலத்த கெடுபிடிகள் உள்ளன. பத்திரிகையாளர்கள் செல்போன்களை அவைக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. புகைப்பட பத்திரிகையாளர்கள் வழக்கத்திற்கு மாறாக வேறு மாடத்தில் அமரச் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வாக்கெடுப்பு தொடங்கும் முன்பாக ஆளும் கட்சி ஆதரவு எம்.எல்.ஏக்கள், ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நடுவே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
அப்போது திடீரென பத்திரிகையாளர் மாடத்தில் ஒலிபெருக்கி வசதி கட்டானது. இதனால் அவை உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பத்திரிகையாளர்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை.












Click it and Unblock the Notifications