மாத சம்பளதாரர் வருமான வரி கணக்கு தாக்கல்: 33 சிறப்பு கவுன்ட்டர்கள் திறப்பு
சென்னை: மாதச் சம்பளதாரர்கள் தங்களது வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யும் பணி இன்று (ஜூலை 28) முதல் தொடங்கியுள்ளது. இதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் 33 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப் பட்டுள்ளன.
ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுவோர்கள், ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் மொத்த வருவாய் உள்ளவர்கள் மற்றும் கம்பெனி அல்லாத வரி செலுத்து பவர்கள் ஆகியோர்களுக்கு ஜூலை 28, 30, 31 ஆகிய தேதி களில் வருமான வரி தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
29-ம் தேதி ரம்ஜான் பண்டிகை என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணியில் இருந்து 5.30 மணி வரை வருமான வரி தாக்கல் செய்யலாம்.

33 சிறப்புக் கவுண்டர்கள்
வருமான வரி செலுத்துபவர்களுக்கு 33 சிறப்பு கவுன்ட்டர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுன்ட்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சத்திற்கு மேல்
ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுபவர்கள் ஆன்லைன் மூலமாகத்தான் வருமான வரி செலுத்த வேண்டும். முதல் முறையாக வருமான வரி செலுத்துபவர்களுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

150 ஊழியர்கள்
வருமான வரி தாக்கல் செய்யும் பணியில் வருமான வரி அலுவலகத்தைச் சேர்ந்த சுமார் 150 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

5.65 லட்சம் பேர்
கடந்த ஆண்டு 5.65 லட்சம் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 55 ஆயிரம் பேர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் கணக்கைத் தாக்கல் செய்தனர்.

காலக்கெடு கிடையாது
எனவே, இந்த ஆண்டும் ஏராளமானோர் தங்களது கணக்கைத் தாக்கல் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய ஜூலை 31தான் கடைசித்தேதி காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications