சிக்குபுக்கு சிக்குபுக்கு.. ஊட்டி-கேத்தி ஸ்பெஷல் ரயில்.. சமோசா, சூப் சாப்பிட்டபடி பயணிகள் உற்சாகம்!
ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது.
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புற சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஊட்டி மலை ரயிலில் பயணம் மேற்கொள்வது மறக்க முடியாத அற்புத பயணமாகும். இதனால்தான் நீலகிரிக்கு வரும் அனைவருமே ரயிலில் பயணம் செய்ய விரும்புகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் விருப்பப்படி சிறப்பு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு, கடந்த மாதம் முதல், சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வரும், 16ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயங்கும். இதனிடையே நீலகிரி மலை ரயிலில் ஆய்வு நடத்தப்பட்டு, கிராம சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் நிலக்கரி நீராவி இன்ஜின் மூலம் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. 'ஊட்டி - கேத்தி இடையே, வார இறுதி நாட்களில், வட்ட சுற்றுலா ரயில் இயக்கவும் முடிவு திட்டமிடப்பட்டது.
அதன்படி, நேற்று முதல் இந்த ரயில் இயங்க தொடங்கியது. இதில், 16 இருக்கைகள் கொண்ட ஒரு முதல் வகுப்பு, 36 இருக்கைகள் மற்றும் 30 இருக்கைகள் கொண்ட, இரு இரண்டாம் வகுப்பு,' என, 82 இருக்கைகளுடன் மூன்றாம் வகுப்பு பெட்டிகள் உள்ளன. இந்த சிறப்பு ரயில் ஊட்டியில் இருந்து மதியம், 2:30 மணிக்கு புறப்பட்டு கேத்தியை, 3:00 மணிக்கு ரயில் சென்றடையும்; மதியம், 3:30 மணிக்கு புறப்பட்டு மாலை, 4:00 மணிக்கு ஊட்டிக்கு வந்தடையும். இதில் முதல் வகுப்பிற்கு, 400 ரூபாய்; இரண்டாம் வகுப்பிற்கு, 200 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பயணிக்கும், 'சமோசா, வெஜிடேபிள் சூப், ரயில்வே சின்னம் பொறித்த தொப்பி, நீலகிரி மலை ரயில் குறித்த கையேடு, பேப்பர் பை' ஆகியவை வழங்கப்படுகின்றன. ஊட்டி ரயில் நிலையத்தில் உற்சாகத்துடன் கிளம்பிய சுற்றுலா பயணிகள் வழிநெடுக தேயிலை தோட்டங்கள், பச்சை புல்வெளிகள், மடிப்பு மடிப்பான காய்கறி தோட்டங்கள் என நீலகிரி அழகை ரசித்தவாறே சென்றனர்.
பர்னல் மற்றும் லவ்டேல் பகுதிகளிலுள்ள குகை பாதையில் ரயில் செல்லும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாக குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முன்னதாக, ராஜ்ய சபா உறுப்பனர் கே.ஆர்.அர்ஜூணன் சுற்றுலா பயணிகளுக்கு சால்வை.அணவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்றார். மிகவும் மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் ராஜ்ய சபா உறுப்பினருடன் செல்பி எடுத்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications