மழை வேண்டி விவசாயிகள் வருண ஜெபம்
வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் மழை வேண்டி வருண ஜெபம் செய்து வருகின்றனர் விவசாயிகள்.
நெல்லை: மழை பெய்ய வேண்டி மணிமுத்தாறில் விவசாயிகள் தீவிரமாக வருண ஜெபம் செய்து வருகின்றனர்.
தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்கி டிசம்பரில் முடிவது வழக்கம். இந்தாண்டு டிசம்பர் மாதம் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் நெல்லை மாவட்டத்தில் அனைத்து அணைகளும் வறண்டு விட்டன. தாமிரபரணி நதி நீர் பாசனத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் செய்வோர் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதற்கிடையை மணிமுத்தாறில் அமைந்துள்ள வன பேச்சியம்மன், பிரம்மாட்சியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி சிறப்பு வருண ஜெபம் நடந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு ஜெபம் மற்றும் யாகமும் நடைபெற்றது. யாகத்தில் அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றி விட்டதால் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான விவசாய நிலங்களில் பயிர் செய்யப்பட்ட பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. இதனால் பலர் பயிர் செய்யாமல் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தக் கொஞ்சம் மழையை நம்பி விவசாயிகள் பயிர் செய்ய முடியாது. அதனால் பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று சோகத்துடன் தெரிவித்தனர்.
-
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications