சென்னை, நெல்லையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள்! புக்கிங் தொடங்கியது
சென்னை: பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா திருவிழாவைக்காண செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை, நெல்லையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
இது குறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை - வேளாங்கண்ணி:
சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு செப்டம்பர் 5ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

இந்த ரயில் மறுமார்க்கத்தில் செப்டம்பர் 6ம் தேதி இயக்கப்படுகிறது. வேளாங்கண்ணியிலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
திருநெல்வேலி - வேளாங்கண்ணி:
திருநெல்வேலியிலிருந்து வேளாங்கண்ணிக்கு செப்டம்பர் 4 ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியிலிருந்து மாலை 3.25 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 3.15 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
இந்த ரயில் மறுமார்க்கத்தில் செப்டம்பர் 5 ம் தேதி இயக்கப்படுகிறது. வேளாங்கண்ணியிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.35 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications