சென்னையிலிருந்து நெல்லை, எர்ணாகுளத்துக்கு கோடை கால சிறப்பு ரயில்
சென்னை: சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்களை புதன்கிழமை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு கட்டண ரயில்:
ரயில் எண் 06003: ஏப்ரல் 1, 22-ஆம் தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
ரயில் எண் 06002: ஏப்ரல் 3, 24-ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரயில்:
ரயில் எண் 06005: ஏப்ரல் 1, 22-ஆம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
ரயில் எண் 06006: ஏப்ரல் 24-ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒட்டப்பள்ளம், திருச்சூர், ஆலுவா ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.