கும்பகோணம் மகாமகத் திருவிழா: சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கும்பகோணம் மகாமகத் தீர்தத் திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவில், விழுப்புரம், சென்னை ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு கட்டணத்துடன் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகத் பெருவிழா, நாளை மறுதினம் பிற்பகல் 12 மணிக்கு மேல், 1.30 மணிக்குள், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மகாமக தீர்த்தவாரி, பிப்ரவரி 22-ம் தேதி, பிற்பகல் 12 மணிக்கு மேல், 1.30 மணிக்குள் நடக்க உள்ளது. இதையொட்டி சுமார் 45 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

special trains has announced for Kumbakonam Mahamaham festival

இந்நிலையில் மகாமகத் திருவிழாவை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இன்று அறிவித்துள்ளது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து விழுப்புரத்திற்கு கும்பகோணம் வழியாக வரும் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு இயக்கப்பட உள்ளது.

அதேபோல் விழுப்புரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில் 22-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ராமேஸ்வரம் - விழுப்புரம் சிறப்பு ரயில் 21-ம் தேதி இரவு 11 மணிக்கும், விழுப்புரம்- ராமேஸ்வரம் சிறப்பு ரயில்மதியம் 12.30 மணிக்கும் இயக்கப்பட உள்ளது.

மேலும் திருச்சி - சென்னை இடையேயான சிறப்பு ரயில் 20-ம் தேதி பிற்பகல் 1.45 மணிக்கும் சென்னை -திருச்சி இடையேயான சிறப்பு ரயில் 23-ம் தேதி காலை 11.10 மணிக்கும் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை துவங்குகிறது என தெற்கு ரயி்ல்வே வெளியிட்டுள்ள செய்திகுறி்ப்பில் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+