மதுரை, நெல்லை, திருச்சி, கோவைக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் தொடங்கிவிட்டதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருச்சி - சென்னை:
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருச்சியில் இருந்து 9-ந்தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் திருச்சி-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06024), அதேநாளில் இரவு 9 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.
மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து 13-ந்தேதி காலை 8.30 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-திருச்சி சிறப்பு ரயில் (06023), அதேநாள் பிற்பகல் 2 மணிக்கு திருச்சி சென்றடையும்.
சென்னை - நெல்லை:
சென்னை எழும்பூரில் இருந்து 11-ந்தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு ரயில் (06025), மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து 12-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06026), மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.
மதுரை - சென்னை:
மதுரையில் இருந்து 15-ந்தேதி காலை 10 மணிக்கு புறப்படும் மதுரை-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06020), அதேநாள் மாலை 6.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.
மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து 18-ந்தேதி காலை 6.15 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-மதுரை சிறப்பு ரயில் (06019), அதேநாள் பிற்பகல் 3 மணிக்கு மதுரை சென்றடையும்.
கோவை - சென்னை:
கோவையில் இருந்து 15-ந்தேதி காலை 11 மணிக்கு புறப்படும் கோவை-சென்னை சென்டிரல் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (06022), அதேநாளில் இரவு 7.35 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.
மறுமார்க்கமாக சென்னை சென்டிரலில் இருந்து 18-ந்தேதி காலை 9.30 மணிக்கு புறப்படும் சென்னை சென்டிரல்-கோவை சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (06021), அதேநாளில் மாலை 6 மணிக்கு கோவை சென்றடையும்.
மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.