தீயாய் வேலை செய்யும் ஊழியர்கள்... கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரம்
சென்னை: சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கடந்தவாரம் வெள்ளிக்கிழமை தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
இதனால், அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பேனர்கள் அகற்றம்..
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதலே சென்னை உட்பட முக்கிய நகரங்களில் பல்வேறு பகுதிகளில், பொது இடங்களில் இருந்த அரசியல் கட்சிகளின் பேனர்கள் அகற்றப்பட்டன.

ஜெயலலிதா போட்டோ...
அதேபோல், அரசு துறை அலுவலகங்கள், அம்மா உணவகம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் இடம் பெற்றிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் வெள்ளைப் பேப்பர் கொண்டு மறைக்கப்பட்டன.

விளம்பரங்கள்...
பொது இடங்களிலும், அரசு துறை கட்டட சுவர்களிலும் எழுதியுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எதிர்பார்ப்பு...
இந்த சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி முற்றிலுமாக நிறைவடைய இன்னும் ஒரு வார காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications