முதல் நாளிலேயே ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. கலாய் வாங்கிய "நியூஸ் ஜெ."
முதல்நாளிலேயே ஸ்பெல்லிங் மிஸ்டேக்.
Recommended Video

சென்னை: நியூஸ் ஜெ சேனல், ஆரம்பித்த முதல் நாளிலேயே பரபரப்பான சேனலாக ஃபேமஸ் ஆகி விட்டது.
முதமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து தங்களது கட்சிக்காகவும் ஆட்சிக்காகவும் நியூஸ் ஜெ. தொலைக்காட்சியை கொண்டு வந்திருக்கிறார்கள். ஜெயா டிவி தங்கள் கையை விட்டு போன நிலையில், தங்களது கட்சிக்கென ஒரு டி.வி தேவைப்படவே இதனை கொண்டு வந்திருக்கிறார்கள்.

அமைச்சர்கள்
நியூஸ் ஜெ-வின் லோகோ அறிமுகம், இணையதளத்தின் தொடக்கம் விழா நேற்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் பேசப்பட்டவை அனைத்தும் நியூஸ்ஜெ டுவிட்டர் பக்கத்தில் உடனுக்குடன் பதிவாகியது.

வால்முனை-வாள்முனை
அதில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசிய ஒரு டுவீட்டில் "நாட்டை ஆளும் மன்னனின் வால் முனையை விட பேனா முனை கூர்மையானது" என பதிவு செய்யப்பட்டுள்ளது. 'வாள் முனை' என்பதற்கு பதிலாக 'வால்முனை' என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக் வந்துவிட்டது. இந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை டுவிட்டர்வாசிகள் உடனே பார்த்துவிட்டு சுட்டிக்காட்ட ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் அது திருத்தப்படவே இல்லை. சேனல் ஆரம்பித்த முதல் நாளிலேயே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா? என கலாய்தான் வந்தது.

எம்ஜிஆர், ஜெயலலிதா
முன்னதாக, விழா தொடங்கும்போது, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, மேடையில் இருந்த டிஜிட்டல் திரையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இல்லாமலேயே நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. நிர்மலா பெரியசாமிதான் நிகழ்ச்சியை தொகுத்து கொடுத்து கொண்டிருந்தார்.

அம்மா படம் எங்கே?
அப்போது திடீரென கூட்டத்திலிருந்து முன்னாள் பெண் கவுன்சிலர்கள் "அம்மா படம் எங்கே, அம்மா படம் எங்கே" என்று சத்தம் போட்டு கூச்சல் எழுப்ப தொடங்கிவிட்டார்கள். இதனால் செய்வதறியாது மேடையில் அனைவரும் விழித்தனர். பின்னர் நிர்மலா பெரியசாமியோ, "வரும்... வரும்.. கண்டிப்பா படம் வரும்" என்று மைக்கிலே சமாளித்தார். அதன் பின்னரே ஜெயலலிதாவின் பெரிய படம் டிஜிட்டல் திரையில் தோன்றியது.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications