சென்னையில் தமிழகம்- இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சென்னையில் இன்று நடைபெற்றது.

தமிழக மீனவர்கள் பாரம்பரிய இடங்களில் மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழகம்- இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கை மீனவளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் துறை தலைமை இயக்குநர் நிமல் ஹெட்டியராச்சி தலைமையிலான குழு கலந்து கொண்டது.

இலங்கை அரசின் சார்பிலும், மீனவப் பிரதிநிதிகள் சார்பிலும் 15 பேர் கலந்து கொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் என 17க்கும் மேற்பட்டோர் இலங்கை குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+