முடிவே இல்லாமல் தொடரும் அட்டூழியம்... தூங்கும் அரசுகள் - புதுகை மீனவர்கள் 4 பேர் மீண்டும் சிறைபிடிப்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 400க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த தங்கச்சாமி என்பவரின் விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற ராமமூர்த்தி, ஜெயபால், வீரா மற்றும் மணிகண்டன் ஆகியோர் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

Sri Lankan navy arrested 4 fishermen again

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி 4 பேரையும் சிறைபிடித்தனர். மேலும் விசைப் படகையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்த 4 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இலங்கை மீனவர்கள் தங்களை சிறைபிடித்தது குறித்து மீனவர்களில் ஒருவரான ராமமூர்த்தி தனது செல்போன் மூலம் ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கூறியுள்ளார். இதனையடுத்து 4 மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+