இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 27 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெடுந்தீவு, கச்சதீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ஓகி புயலால் தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த 433 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. கரை திரும்பாத மீனவர்களை காப்பாற்றி அழைத்து வரக் கோரி சக மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sri Lankan navy arrests 27 TN fishermen

இந்நிலையில் இலங்கை கடற்படையினர் வேறு அட்டூழியம் செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் 27 பேர் 5 படகுகளில் நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்க இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு மத்திய, மாநில அரசுகள் முடிவு கட்ட வேண்டும் என்பது மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+