4 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
ராமேஸ்வரம்: இலங்கை தமிழர்கள் 4 பேர் இன்று அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாக, லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை இலங்கை மன்னார் மற்றும் வவுனியா பகுதிகளை சேர்ந்த 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்தனர்.
இலங்கை மாங்குளம் சதீஷ், குளத்துமோட்டை ரவீந்திரன், தோணிக்கல் சாந்தி மற்றும் மலர் ஆகிய நால்வரும் நேற்று மாலை தலைமன்னாரில் இருந்து இலங்கையை சேர்ந்த படகு ஒன்றில் கிளம்பியுள்ளனர்.
நள்ளிரவு தனுஷ்கோடி பகுதியில் உள்ள மணல் திட்டு அருகே மார்பளவு தண்ணீரில் இவர்களை இறக்கிவிட்ட படகோட்டிகள் இலங்கைக்கு திரும்பி சென்றனர்.
இரவு முழுதும் நடந்து வந்த இவர்கள் இன்று காலை தனுஷ்கோடி காவல் நிலையத்தினை அடைந்தனர். தனுஷ்கோடி போலீஸார் அகதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.