அப்பாவுக்குக்காக சிவகாசியில் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்ரீதேவி!
மறைந்த நடிகை ஸ்ரீதேவி தனது தந்தைக்காக 1989ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.
சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவி தனது தந்தைக்காக 1989ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.
உறவினரின் திருமணத்திற்கு துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பால் அங்கேயே மரணமடைந்தார். நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்ரீதேவியின் உடல் துபாய் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்காததால் அவரது உடல் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் குடும்பம்
இந்நிலையில் அரசியல் பின்புலத்தை சேர்ந்த குடும்பத்தில் இருந்து வந்த ஸ்ரீதேவி அதனை தனது திரை வாழ்வில் எங்கேயும் வெளிப்படுத்தியதில்லை. ஆம் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.

ஸ்ரீதேவி பிரச்சாரம்
ஸ்ரீதேவியின் தந்தையான ஐயப்பன் 1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிவகாசி தொகுதில் காங்கிரஸ் போட்டியிட்டார். அப்போது ஸ்ரீதேவி தனது தந்தையுடன் ஒரு வார காலம் சிவகாசி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஸ்ரீதேவி.

தேர்தலில் தோல்வி
ஆனால் அந்த தேர்தலில் ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன் தோல்வியடைந்தார். ஆனாலும் முன்னதாக அவரது பெரியப்பா ராமசாமி 1977ல் ஜனதா கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக 10 ஆண்டுகளும், அனுப்பன்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக 20 ஆண்டுகளும் இருந்துள்ளார்.

பெற்றோர் மரணம்
ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன் 1990ல் மாரடைப்பாலும் 1996ம் ஆண்டு தாய் ராஜேஸ்வரி புற்று நோயாலும் மரணமடைந்தனர். அதன் பிறகே ஸ்ரீதேவி திருமணம் செய்துகொண்டார்.

பார்க்காமலேயே மறைந்த மயிலு
ஆனால் அதற்கு பிறகு இதுவரை சொந்த ஊருக்கு நடிகை ஸ்ரீதேவி வரவில்லை.அவரது பெற்றோரின் இறப்புக்குப் பின்னர் வர இயலாத சூழ்நிலையால் நீண்ட நாட்களாக சொந்த ஊரையே பார்க்காமலேயே மறைந்துவிட்டார் மயிலு.












Click it and Unblock the Notifications