தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக 15-வது முறையாக சீனிவாசன் மீண்டும் தேர்வு
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக 15-வது முறையாக சீனிவாசன் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பதவி வகித்தவர் சீனிவாசன். ஐபிஎல் 6வது தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருந்த சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் பிக்ஸிங் புகாரில் சிக்கினார்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த சர்ச்சையில் சீனிவாசன் பெயரும் அடிபட்டது.

தேர்தலுக்கு தடை கோரி வழக்கு
இதனிடையே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தேர்தலிலும் சர்ச்சை வெடித்தது. சென்னையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஐபிஎல் பிக்ஸிங் தொடர்பான லோதா கமிட்டி அறிக்கையில் கிரிக்கெட் சங்கங்களின் முக்கிய பதவிகளில் சமூகத்திலும், அரசியலிலும் மிகுந்த செல்வாக்கு உள்ளவர்களே இருப்பதாலும் அவர்கள் நீண்டகாலம் இப்பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவும் சட்டவிதிகளை மாற்றியுள்ளனர்; ஆகையால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு
ஆனால் லோதா கமிட்டி விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது.

15-வது முறையாக சீனி தேர்வு
இச் சங்கத்தின் தலைவராக சீனிவாசன் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 15-வது முறையாக அவர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

10-வது முறையாக காசி..
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளராக காசி விஸ்வநாதன் 10-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவர்களாக அகோரம், முரளி, ராமன், ஜி.சீனிவாசன், பாஸ்கரன் மற்றும் ரமேஷ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications