வன்முறையின்றி, விறுவிறுவென நடந்த ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்.. 82.54 % வாக்குகள் பதிவு!
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணியளவில் தொடங்கிய இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. இத்தேர்தலில் 82.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். இதனால் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வளர்மதி, தி.மு.க.வின் ஆனந்த், பாரதிய ஜனதாவின் சுப்ரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை உட்பட 29 பேர் களத்தில் உள்ளனர்.
காலையில் இருந்தே விறுவிறுப்பாக நடைபெற்ற இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 53.2 சதவீத வாக்குகள் பதிவாகியது. 3 மணி நிலவரப்படி 65.89 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது.
மாலை 5 மணி வரையிலான நிலவரப்படி 76.89 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆண்கள் 76 சதவீதமும், பெண்கள் 77.8 சதவீதமும் வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.
முன்னாள் முதல்வரின் தொகுதி என்பதால் வாக்குப் பதிவு ஆரம்பத்திலிருந்தே விறுவிறுப்பாக இருந்தது. சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் குழப்பம் ஏற்பட்டதால் வாக்குப் பதிவில் சற்று தாமதம் ஏற்பட்டது.
வாக்குப்பதிவின்போது எந்த இடத்திலும் வன்முறை நடக்கவில்லை. போலீஸார் பாதுகாப்பை சிறப்பாக செய்திருந்தனர். சில இடங்களில் லேசான உராய்வுகள் ஏற்பட்டு அவை உடனடியாக சரி செய்யப்பட்டன.
இன்று மாலையே வாக்குச்சாவடிகள் வாரியாக வாக்குப் பெட்டிகள் வரிசை படுத்தப்பட்டு, தேர்தல் அதிகாரிகளின் முன்னால் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் பஞ்சப்பூரில் அமைந்துள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்படும் வாக்குப் பெட்டிகள் வருகின்ற 16 ஆம் தேதியன்று பிரிக்கப்பட்டு, ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
கடந்த 2011 பொதுத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்குப் பதிவு 82 சதவீதம் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications