எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: மாணவிகள் 93.6% பேர், மாணவர்கள் 88% பேர் தேர்ச்சி
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் 18 மாணவிகள், ஒரு மாணவர் என 19 பேர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். 125 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், 321 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் மாணவிகள் 93.6 சதவீதம் பேர் அதாவது 4 லட்சத்து 69 ஆயிரத்து 810 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 88 சதவீதம் பேர் அதாவது 4 லட்சத்து 56 ஆயிரத்து 308 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பிற ஆண்டுகளைப் போன்று இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.