ஆசிரியையுடன் ஓட்டம் பிடித்த 10ம் வகுப்பு மாணவனுக்கு வலை.. நெல்லை அருகே கொடுமை!
நெல்லை: நெல்லையில் 10 வகுப்பு மாணவன் ஒருவருடன் ஆசிரியை ஒருவர் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கருப்பசாமி கோவில் பகுதியை சேர்ந்த சிவசுந்தரபாண்டியன் என்ற மாணவன் ஈ.விலக்கு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

மாணவன் சுந்தரும், செங்கோட்டை காலன்கரை பகுதியை சேர்ந்த கோதை லட்சுமி என்ற 26 வயதுடைய ஆசிரியை ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த காதல் விவகாரம் மாணவனின் பெற்றோருக்கு தெரிய வரவே, ஆசிரியையை கண்டித்துள்ளதோடு, மகனுக்கு அறிவுரையும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவன் சுந்தர் எழுதி வந்தார். கடந்த 31ஆம் தேதி தனது நண்பர்கள் வீட்டுக்கு சென்றுவருவதாக தனது தாயார் நாச்சியாரிடம் கூறிசென்றுள்ளார்.
அதன்பின் அவனை காணவில்லை இரவு வீட்டுக்கும் வரவில்லை இந்நிலையில் செங்கோட்டையை சார்ந்த ஆசிரியையும் தனது வீட்டில் தோழி ஒருவருக்கு திருமணம் நடப்பதாக கூறி சென்றுள்ளார் அவரையும் காணவில்லை.இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியை, மாணவனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
இது குறித்து மாணவனின் பெற்றோர் கடையநல்லூர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதில், தனது மகன் வீட்டிலிருந்த வங்கி ஏ.டி.எம்.கார்டை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ரூபாய் பத்தாயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.இந்நிலையில் மாணவன் காணாமல் போன சம்பவம் கூறித்து அன்றைய தினமே காணமல் போன ஆசிரியை வீட்டில் விசாரித்த போதுதான் அவரையும் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.
26 வயதுடைய எம்.எஸ்.சி.படித்த ஆசிரியை ஒருவர் 16 வயதுடைய மாணவனுடன் ஓடிய சம்பவம் நெல்லை மாவட்டம், கடையநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் இந்த மாணவன் ஏற்கனவே பள்ளி நிர்வாகத்தால் பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும்,பெற்றோரை அழைத்துவந்து மன்னிப்பு கோரியதாகவும் ,சம்பவம் நடப்பதற்கு முன் சில மாணவர்களிடம் அந்த ஆசிரியையை தான் காதலிப்பதாகவும்,கூட்டிக் கொண்டு ஓடப்போவதாகவும் தெரிவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவன் ஏற்கனவே 9ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு ஆசிரியையையும் காதலித்துள்ளான் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் காதலுக்கு கண்ணில்லை என்பார்களே அது இந்த மாதிரி அவலங்களை நினைக்கும் போது உண்மையாகத்தான் தோன்றுகிறது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா












Click it and Unblock the Notifications