சித்தா, எப்படி சுத்தினாலும் வலையில் சிக்க மாட்டோம்ல.. 'லைட்டரை'க் கொளுத்திய டி.ஆர்.பாலு!

முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஐ.பெரியசாமியின் 2வது மகன் பிரபு - சுகன்யா திருமணம் கடந்த 24-ம் தேதி திண்டுக்கல்லில் நடந்தது.
இதில் காங்கிரஸ் எம்.பியான என்.எஸ்.வி. சித்தன் கலந்து கொண்டார். அதேபோல மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார். அப்போது சித்தன், ஸ்டாலினுக்கு சால்வை போட்டார்.
பின்னர் டி.ஆர். பாலு மணமக்களை வாழ்த்திப் பேசும்போது இதைக் குறிப்பிட்டுப் பேசினார். அ்வர் பேசுகையில், சித்தன், தளபதிக்கு சால்வை அணிவிக்கும்போது, மீனவன் வலை விரிப்பதைப்போல சுற்றி அணிவித்தார். ஆனால், உங்கள் வலையில் நாங்கள் சிக்க மாட்டோம் என்று கூற கலகலப்பு கூடியது.
அடுத்து ஸ்டாலின் பேசினார். அப்போது தன் பங்குக்கு வாரினார். அவர் பேசுகையில், காங்கிரஸ் எம்.பி. சித்தன் எனக்கு சால்வை அணிவித்ததைப் பற்றி அண்ணன் பாலு சொன்னார். எந்த வலையிலும் நாங்கள் சிக்க மாட்டோம்... உங்கள் வலையில் இந்த இயக்கத்தின் தொண்டர்கள் மாட்ட மாட்டார்கள் என்று சொல்லி காங்கிரஸாரை மேலும் நெளிய வைத்தார்.
கூட்டத்திற்கு வந்தவர்கள் என்னவோ இதை நன்றாகவே ரசித்தனர்.... ஆனால் திமுக தலைவர் கருணாநிதிதான் ஏன் இப்படி ஒரு பேச்சு என்று எரிச்சலாகி விட்டாராம்.












Click it and Unblock the Notifications