பணத்தைக் காட்டுது ஒரு அணி.. பிணத்தைக் காட்டுது இன்னொரு அணி.. படுபாவிகள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் ஒரு அணி பணத்தைக் காட்டி ஓட்டு வேட்டையாடுகிறது. இன்னொரு அணியோ பிணத்தையே மாதிரியாக காட்டி வாக்கு கேட்கிறார்கள். இந்த படுபாவிகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று ஸ்டாலின் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதிலிருந்து...
- ஆர்.கே. நகர் பிரச்சாரத்தில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி ஜெ. சவப்பெட்டியை வைத்து வாக்கு கேட்கிறது.
- இது ஈவு இரக்கமற்ற மனித நேயமற்ற செயல்.
- "இதய தெயவம் புரட்சித் தலைவி அம்மா" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.
- ஓபிஎஸ் மறைந்த ஜெயலலிதாவுக்கு காட்டும் நன்றிக் கடனும் பண்பாடும் இதுதானா?.
- மறைந்த அம்மையார் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பது வழக்கமான அனுமதிக்கப்பட்ட தேர்தல் நடைமுறை.
- அதையும் தாண்டி அவரது மரணத்தை முன் வைத்து வாக்கு கேட்கிறீர்கள்.
- இப்போது மறைந்த முதல்வரின் சவப்பெட்டியை வைத்து வாக்கு கேட்கிறீர்கள்
- தேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டியை தெருவெல்லாம் இழுத்துச் சென்று ஓட்டு கேட்டுள்ளனர்.
- குறுகிய நோக்கத்துடன் வாக்கு கேட்பது தேசியக் கொடியின் மாண்பையும் கண்ணியத்தையும் கறைபடியச் செய்வதாகாதா?.
- இது இதயமற்ற பிரச்சாரம்.
- ஜெ., மீது எந்த அளவிற்கு வன்மம் மனதிற்குள் இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
- சுயநலத்தை நிறைவேற்றிக்கொள்ள ஜெ., உருவத்தை எந்த எல்லைக்கும் எடுத்துச் செல்வார்கள் இவர்கள்.
- வாக்காளர்கள் பண்பாடற்ற இந்தப் படுபாவிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications