எடப்பாடி பழனிச்சாமி மூழ்கியதால் ஆற்றுக்கு பாவம் ஏற்பட்டுள்ளது.. ஸ்டாலின் சீண்டல்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூழ்கியதால் ஆற்றுக்கு பாவம் ஏற்பட்டுள்ளது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூழ்கியதால் ஆற்றுக்கு பாவம் ஏற்பட்டுள்ளது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் நடைபெறும் மகா புஷ்கரம் விழா 144 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. வரும் 24ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது.
இந்நிலையில் 9 ஆம் நாளான நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு காவிரியாற்றில் புனித நீராடினார்.

டிடிவி தினகரன் விமர்சனம்
அவருடன் அமைச்சர் ஓஎஸ் மணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புனித நீராடியது குறித்து ஏற்கனவே டிடிவி தினகரன் விமர்சித்திருந்தார்.

நதிதான் மாசுபடும்
துரோகத்தை போக்க எடப்பாடி பழனிச்சாமி எந்த நதியில் குளித்தாலும் பாவம் போகாது என்றார். பாவம் செய்தவர்கள் நதியில் மூழ்கினால் நதிதான் மாசுபடும் என்றும் டிடிவி தினகரன் விமர்சித்திருந்தார்.

ஸ்டாலினும் விமர்சனம்
இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் எடப்பாடி பழனிச்சாமியின் புனித நீராடலை விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மேலும் தான் செய்த பாவத்தை நீக்குவதாக நினைத்து முதல்வர் பழனிசாமி குளத்தில் மூழ்கினார்.

குளத்திற்கு பாவம்
ஆனால், அவர் நீரில் மூழ்கி குளத்திற்கு பாவத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்ற வழக்கில் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications