மக்கள் தேமுதிக வந்தால் அவர்களைச் சந்திக்க கருணாநிதி தயார்... ஸ்டாலின்
சென்னை: மக்கள் தேமுதிக திமுகவிடம் வந்தால் அவர்களைச் சந்திக்க திமுக தலைவர் கருணாநிதி தயாராக இருக்கிறார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேமுதிக உடைந்து விட்டது. வி.சி.சந்திரகுமார் தலைமையில் புதிய அணி உருவாகியது. அந்த அணி தற்போது மக்கள் தேமுதிக என்ற பெயரில் தனி இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.
இந்தக் கூட்டணி திமுக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதை வலுப்படுத்துவது போல மக்கள் தேமுதிக எங்களிடம் வந்தால் அவர்களைச் சந்திக்கத் தயார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில், மக்கள் தேமுதிக, திமுகவிடம் வந்தால் அவர்களைச் சந்திக்க கருணாநிதி தயாராக இருக்கிறார் என்றார் ஸ்டாலின்.
ஸ்டாலினுக்கு அவர்தான் எதிரி என்று விஜயகாந்த் சொல்லியுள்ளாரே என்ற கேள்விக்கு அவருக்கு நான் எதிரி இல்லை என்பதையே விஜயகாந்த் சொல்லியுள்ளார் என்றார் ஸ்டாலின்.
திமுக தேர்தல் அறிக்கை குறித்த கேள்விக்கு, மக்களின் கருத்துக்கள், எதிர்பார்ப்புகளை அறிந்து அதன்படி தயாரிக்கப்பட்டுள்ளது திமுக தேர்தல் அறிக்கை. இதை பாமகவினுடையது என்று டாக்டர் ராமதாஸ் கூறுவது தேவையற்றது என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications