முதல்வருடனான ஆலோசனை குறித்து ஸ்டாலின் தரும் தகவல்கள் தவறு: அமைச்சர் ஜெயக்குமார்
Recommended Video

சென்னை: காவிரி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடியாருடனான ஆலோசனை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தவறான தகவல்களைத் தருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்று மக்கள் விரும்பவில்லை என்ற அவர், திமுகவினர்தான் அப்படி விரும்புகின்றனர் என்றார்.

மேலும் ஸ்டாலின் பக்குவப்பட்ட தலைவர் இல்லை என்ற அவர், காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வருடன் நடந்த ஆலோசனை குறித்து ஸ்டாலின் தவறான கருத்தை தெரிவித்து வருகிறார்.
எதிர்கருத்து தெரிவித்தால் உடனே முந்திரிக்கொட்டை என்பதா? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார், நான் எந்த விஷயத்தையும் முந்திரிக்கொட்டை போன்று சொல்வது கிடையாது என்றும் கூறினார்.
மேலும் பெண்கள் நள்ளிரவு 12 மணிக்கு கூட தனியாக செல்லும் நிலை தமிழகத்தில் உள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications